சீரியல் மூலம்தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது


பாவடை தாவாணியில் எளிமையாய் வந்து அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் தென்றல் நாயகி துளசி. ஸ்ருதி என்பதைவிட துளசி என்ற பெயர்தான் அனைவரின் நினைவிலும் நிற்கிறது. சினிமாவில் தொடங்கிய அவரின் பயணம் சின்னத்திரையில் வெற்றிகரமானதாக நீடிக்கின்றது. தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கைப் பற்றி துளசியிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.


அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட்​டரி எக்ஸ்​சர்​வீஸ்​மேன்,​​ அம்மா ​சுலோச்​சனா ராஜன்,​​ நான்.​ இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண்​டெல்​லாம் எது​வு​மில்லை.​ என் தாய்​மொழி மலை​யா​ளம்.​ சின்ன வய​தில் டான்ஸ் கொஞ்​சம் கத்​துக்​கிட்டு இருக்​கேன் அவ்​வ​ள​வு​தான்.​
நான் நடிக்க வேண்​டும் என்று ஆசைப்​பட்​டது எல்​லாம் கிடை​யாது.​ சின்ன வய​தில் பள்ளி நாட​கங்​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அப்​படி எட்​டாம் வகுப்பு படிக்​கும் பொழுது ஒரு நாட​கத்​தில் நடித்​தேன்.​ அப்​போது நிகழ்ச்​சி​யில் எடுத்த போட்​டோவைப் பார்த்​து​விட்டு நடிக்​கக் கூப்​பிட்​டார்​கள்.​ ஆனால் பத்​தா​வது படிக்​கும் போது​தான் நடிக்க வந்​தேன்.​ மலை​யா​ளப் படத்​தில் அறி​மு​க​மா​னேன்.​ அதன்​பி​ற​கு​தான் தமி​ழுக்கு வந்​தேன்.​ இந்த நான்கு வரு​டப் போராட்​டத்​திற்குப் பிறகு இப்​பொ​ழு​து​தான் நல்ல வாய்ப்பு கிடைத்​தி​ருக்​கி​றது.​

"ஜெர்ரி' படம் ரீலி​ஸிற்​குப் பிறகு நல்ல கதா​பாத்​தி​ர​மாக இருக்​க​வேண்​டும் என்று எதிர்​பார்த்து காத்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் சன் டிவி​யில் விக​டன் டெலி​வி​ஷன் தயா​ரிப்​பில் தென்​றல் தொட​ருக்கு நடிக்​கிற வாய்ப்பு வந்​தது.​ ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது அத​னால் உடனே ஒப்​புக்​கொண்​டேன்.​டைரக்​டர் கும​ரன் வந்து கதை​யைச் சொன்​னார்.​ "பாவாடை தாவணி போட்​டு​கிட்டு நீங்க சாதா​ர​ண​மாக எப்​ப​வும் வீட்​டில் இருப்​பது போல ஒரே ஒரு பொட்டு மட்​டும் வெச்​சுக்​கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த்​தி​ட​லாம்' என்று சொன்​னார்.​ பிறகு டய​லாக் கொடுத்து பேசச் சொன்​னார்​கள் அதில் ஓ.கே.​ ஆகி​விட்​டேன்.​

துளசி கதாபாத்திரத்திற்கு இந்​த​ள​விற்கு வர​வேற்பு இருக்​கும் என்று நினைக்​கலை.​ ஒரு நல்ல பிரா​ஜக்ட் ஒத்​துக்​கிட்டு செய்​வது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ திரை​யு​லகைச் சார்ந்​த​வர்​க​ளும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்​டி​னார்​கள்.​ அதைக் கேட்​கும் பொழுது என் கேரக்​டர் மீது இன்​னும் ஆர்​வம் அதி​கம் ஆகி​றது.​ துளசி கேரக்​ட​ரில் வரும் மேன​ரி​ஸம்,​​ உச்​ச​ரிப்பு,​நடிப்பு எல்​லாமே டைரக்​டர் சொல்லி கொடுப்​பதை அப்​ப​டியே செய்​கி​றேன்.​ அவர் சொன்​னதை அப்​ப​டியே என்​னு​டைய கதா​பாத்​தி​ரத்​தில் பிர​திப​லிக்​கி​றேன்.​

சினி​மாவை விட தென்றல் தொடர் பெரி​ய​ள​வில் ​ அங்​கீ​கா​ரத்தை உண்டு பண்​ணி​யி​ருக்கு.​ மலை​யா​ளத்​தில் "தோஸ்த்' என்ற படம் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அது​தான் என்​மு​தல் பட​மும் கூட.​ "காதல் டாட் காம்',​ "ஜெர்ரி',​ "மந்​தி​ரம்' என மூன்று தமிழ் படங்​க​ளில் நடித்​தேன்.​ தெலுங்​கில் இரண்டு,​​ மூன்று படங்​கள் நடித்​தி​ருக்​கி​றேன்.​ இத்​தனை படம் நடித்​தி​ருந்​தா​லும் எனக்கு இந்​தத் தொட​ரும்,​​ துளசி கேரக்​ட​ரும்​தான் பெரி​ய​ள​வில் பெயர் வாங்கி கொடுத்​தி​ருக்​கி​றது.​ இது,​​ தென்​றல் தந்த அங்​கீ​கா​ரம்​தான்.​ பெரி​யத்​தி​ரை​யில் எதிர்​பார்த்​தது சின்​னத்​தி​ரை​யில் கிடைத்​தி​ருக்​கி​றது என்று சொல்லிவிட்டு புன்னகையோடு விடைகொடுத்தார் ஸ்ருதி.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel சீரியல் மூலம்தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan சீரியல் மூலம்தான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது