நித்தியின் வலையில் விழுந்திருக்கும் நடிகை கௌசல்யா


எத்தனை முறை விபூதி பூசினாலும் மறுபடியும் மறுபடியும் நெற்றியை காட்டுவதில் நமக்கு நிகர் நாம் மட்டுமே. ரஞ்சிதாவை தொடர்ந்து தனது அழகான நெற்றியை நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார் நடிகை கவுசல்யா.

காலமெல்லாம் காதல் வாழ்க, சொல்லாமலே போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் காலிங்பெல்லை விடாமல் அடித்தவர் கவுசல்யா.

வரிக்குதிரை தேய்ந்து வண்ணத்துப்பூச்சி ஆன மாதிரி மார்க்கெட் தேய்ந்து டி.வி ஷோக்களில் கவனம் செலுத்தினாலும் கவுசல்யாவின் சிரிப்பில் மட்டும் அந்த காந்தம் போகவேயில்லை. இந்த நிலையில்தான் அவருக்கு தீராத முதுகுவலி வந்து சேர்ந்ததாக தகவல்.

எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் அது தீராததால் தோழிகளில் அட்வைஸ்படி நித்தியானந்தாவின் ஆசிரமத்தை நாடியிருக்கிறார் கவுசல்யா. இவருக்கு ஹீலிங் தெரபி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம் நித்தி.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi