அமீரின் பிடியில் இருந்து விடுதலை பெறும் நிது சந்திரா

‘அப்பாடா ஒரு வழியா அமீர் பட ஷூட்டிங் முடிஞ்சுது' என்றார் நீது சந்திரா. ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் படம் ‘ஆதிபகவன்'. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி வருடக்கணக்கில் நடந்து வந்தது


இதனால் வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்கும் ஜெயம் ரவி புதிய படங்களை ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தார். பின்னர் படத்தின் இறுதிகட்ட ஷெட்டியூல் முடிவதற்கு முன்பே ‘பூலோகம்Õ என்ற படத்தை நடிக்க ஒப்புக்கொண்டார். 


இந்நிலையில் இதன் இறுதி கட்ட ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் பங்கேற்ற பிறகு நீது சந்திரா கூறியதாவது: ஒரு வழியாக 'ஆதிபகவன்' ஷூட்டிங் முடிந்தது. ராஜஸ்தானில் பாடல் காட்சிகளும், சில சீன்களும்  படமாக்கப்பட்டன. இதன் இறுதிவடிவம் அமீருக்கு திருப்தி தந்திருக்கிறது.


 இப்படம் முடிவதற்கு நீண்ட காலம் ஆகி இருக்கிறது என்பது எனக்கு தெரிகிறது. ஆனாலும் அதற்காக செலவிட்ட நேரம் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய திரை வாழ்வில் இதுவொரு முக்கிய படமாக அமைந் திருக்கும். இவ்வாறு நீது சந்திரா கூறினார். ஹீரோயின் காட்சிகள் முடிந்தபோதிலும் ஜெயம் ரவி நடிக்கும் சில காட்சிகள் ராஜஸ்தானில் படமாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பட வட்டாரம் தெரிவிக்கிறது.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi